புதுடெல்லி: கரும் உற்பத்தி அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஸ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். ‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகிய பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது உண்மைதானா, அப்படியென்றால் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன’ என எம்பி ராஜேஷ்குமார் மாநிலங்களைவையில் கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், ‘‘சர்க்கரை, வெல்லப்பாகு, பயோடீசல் ஆகியவைக்கு தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். இதில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் உட்பட சுமார் 13 மாநிலங்களில் தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. லக்னோ மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.