தமிழகம் கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர இரண்டரை மணி நேரம் வீணை வாசித்த 6ம் வகுப்பு மாணவி!: குவியும் பாராட்டு..!! Jun 18, 2021 சேலம் சேலம்: கொரோனா தொற்றில் இருந்து உலகம் மீண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், 6ம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டரை மணி நேரத்தில் 25 கீர்த்தனைகளை வீணையில் இடைவிடாமல் வாசித்து பிரார்த்தனை செய்துள்ளார். சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த கருணாகரன், சிவகாமி தம்பதியினரின் மகள் சைந்தவி. 6ம் வகுப்பு படித்து வரும் இவர் அவருடைய தாயாரிடம் வீணை பயின்று வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் நலம்பெற வேண்டி மாணவி சைந்தவி வீணையில் 25 கீர்த்தனைகள் வாசித்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். மகா கணபதியில் தொடங்கி தனஸ்டி உள்ளிட்ட 25 கீர்த்தனைகளை இடைவிடாமல் 2 மணி நேரம் 30 நிமிடத்தில் மனம் உருகி வாசித்து மாணவி பிரார்த்தனை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீணை வாசிப்பதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மாணவி சைந்தவி தெரிவித்துள்ளார். … The post கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர இரண்டரை மணி நேரம் வீணை வாசித்த 6ம் வகுப்பு மாணவி!: குவியும் பாராட்டு..!! appeared first on Dinakaran.
திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை!
கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது
வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!