டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் அனுமதிக்க மாட்டோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ம் தேதி அன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி; இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கண்காணிப்போம் என்றார்.