லண்டன்: இங்கிலாந்தில் செயல்படும் இளவரசர் வேல்ஸ் அறக்கட்டளை, 1979ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டப்படுகிறது, இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இருந்தும் இந்த அறக்கட்டளை ரூ.9.5 கோடி நன்கொடை பெற்றதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.