பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா திடீர் சந்திப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி

சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று சசிகலா திடீரென சந்தித்து பேசினார். சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று திடீரென சசிகலா சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல் நலன் குறித்தும் சசிகலா கேட்டறிந்தார். சந்திப்புக்கு பின்னர் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பண்ருட்டி ராமசந்திரனை நேரில் பார்த்து அரசியல் பற்றி இருவரும் பேசினோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூட அனைவரும் இணைய கூடும். எனது பயணத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு  இருக்கிறது என்றார்.  அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. யார் முழுமையாக கட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்து பேசியது அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: