பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் முதல்நாளில் இந்திய வீரர்கள் பல போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர். 2வது நாளான இன்று இந்தியா பதக்கம் வேட்டையை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பளுதூக்குதலில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு 49 கிலோ எடை பிரிவில் களம் இறங்குகிறார். அவர் தங்கபதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 57 கிலோ எடை பிரிவில் களம் காண்கிறார்.