சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார்; அதை நாங்கள் விரும்பவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செஸ் போட்டி உலகளவில் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமைதான். ஆனால் இந்த விளையாட்டு போட்டியில் புகழ் பெற்றியிருக்கின்ற சாம்பியன்கள் இருக்கின்றார்கள். பொதுவாக பிரதமர் ஒரு நிகழ்ச்சியிலே பங்குபெறும்போது, படங்கள் வைப்பதற்கு ஒரு ப்ரோட்டோகால் இருக்கிறது.