அண்ணாமலை ஊசி பட்டாசு கே.எஸ்.அழகிரி தாக்கு

சிதம்பரம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து சிதம்பரத்தில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு ஆளுநர் செயல்படுவது நியாயமா? மோடியால் இதற்கு பதில் சொல்ல முடியுமா?. முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 80 கோடி ரூபாய் செலவில் வங்க கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ் சமூகத்தில் மக்களை தட்டி எழுப்பிய வலிமையான தலைவர் கலைஞர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி பட்டாசு மாதிரி. இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார், ஒன்றுக்கும் ஆதாரமில்லை என்றார்.

Related Stories: