தஞ்சாவூர்: கும்பகோணம் அணைக்கரை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்களை தேடும் பணி இருள் சூழ்ந்த காரணத்தினால் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மதகு சாலையை சேர்ந்த 4 இளைஞர்களில், மனோஜ், அப்பு, ஆகாஷ் ஆகிய 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி இருள் சூழ்ந்ததை அடுத்து, நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தலைமை கொடறா கோ.வி செழியன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.