ஜம்மு: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரியில் 7 லஷ்கர் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை ேசர்ந்த 7 தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை ஜம்மு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.