திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் அதிகாலையில் அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்காக தனிகவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை முந்தைய நாளில் பெறும் பக்தர்கள், மறுநாள் அதிகாலை 2 மணியளவில் சுவாமியை தரிசிப்பார்கள். ஆண்கள் வேட்டி மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார் அல்லது புடவையிலும் அனுமதிக்கப்படுவர். ஆண், பெண்கள் தனித்தனி குழுவாக அங்கபிரதட்சணம் செய்து அதன்பின்னர் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிப்பார்கள்.இந்நிலையில் அங்க பிரதட்சண டிக்கெட் கடந்த சில மாதங்களாக தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாத அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.