வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் 14வது உலக தடகள சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீராங்கனை தங்கப் பதக்கத்தினை தட்டிச் சென்றார். ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் கடந்த 4 நாட்களாக உலக சாம்பியன் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 வீராங்கனைகள் தங்கப் பதக்கத்திற்கு போட்டியிட்டனர். இதில் கென்யாவை சேர்ந்த ஃபெய்த் கிபியேகான் அசுர வேகத்தில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். இவர் 3 நிமிடம் 55.96 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்று குதூகலித்தார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த கிடாவ் சேகே 3 நிமிடம் 54.52 வினாடிகளில் இலக்கை கடந்து 2ம் இடத்தை பிடித்தார்.