வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து: மர்ம நபருக்கு வலை

சென்னை: பரங்கிமலையில்  வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிமலை அட்கோ காலனியை சேர்ந்தவர் ஜோசப் (60). இவரது, மனைவி ஷெர்லின் ஜோசப் (57). இவர்களது மகன் தருண் (28). நேற்று வீட்டின் முதல் தளத்தில் ஷெர்லின்ஜோசப்  இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 25  வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென வீடு புகுந்து, ஷெர்லின் ஜோசப்பை கீழே தள்ளிவிட்டு, கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறி சத்தம் கேட்டு மாடியில் இருந்து ஓடிவந்த மகன் தருண், அருகில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து அந்த வாலிபரை பலமாக தாக்கியுள்ளார்.

பின்னர் அவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து தருண் பரங்கிமலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் காயத்துடன் கிடந்த ஷெர்லின் ஜோசப்பை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், போலீசார் விசாரனை நடத்தினர். இதில், ஷெர்லின் ஜோசப்  நகை பணத்திற்காக குத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரித்து, தப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: