சென்னை: பரங்கிமலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிமலை அட்கோ காலனியை சேர்ந்தவர் ஜோசப் (60). இவரது, மனைவி ஷெர்லின் ஜோசப் (57). இவர்களது மகன் தருண் (28). நேற்று வீட்டின் முதல் தளத்தில் ஷெர்லின்ஜோசப் இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென வீடு புகுந்து, ஷெர்லின் ஜோசப்பை கீழே தள்ளிவிட்டு, கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறி சத்தம் கேட்டு மாடியில் இருந்து ஓடிவந்த மகன் தருண், அருகில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து அந்த வாலிபரை பலமாக தாக்கியுள்ளார்.