பவானி: சென்னம்பட்டி வனப்பகுதியில் பெண் யானை சேற்றில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்து இறந்து கிடந்தது. ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், குருவரெட்டியூர் பிரிவு, எண்ணமங்கலம் காப்புக்காடு முரளி மேற்கு பீட், குரும்பனூர்காடு சரக பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பெண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கௌதம், உதவி வனப்பாதுகாவலர் மதிவாணன், வனச் சரகர்கள் செங்கோட்டையன், பழனிசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.