செங்கல்பட்டு: மறைமலைநகரில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சாமியார் கேட் சாய்பாபா கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஜோதி (எ) அஞ்சலாட்சி (36). இவரது கணவர் முருகேசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உயிரிழந்தார். மறைமலைநகர் மெல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (40). திருமணமான இவர் முருகேசனின் நண்பர். ஜோதிக்கு 17, 14 வயதில் மகன், மகள் உள்ளனர். முனியசாமிக்கும், ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடும்பத்தை பிரிந்து, ஜோதி வீட்டிலேயே தங்கி அவருடன் முனியசாமி குடும்பம் நடத்தி வந்தார்.