மதுரை: மதுரை அருகே உள்ள பசுமலை கிராமத்தை சேர்ந்த சிறுமியை பிரீபையர் கேம் மூலம் பழகி மகாராஷ்டிரா மாநிலதிற்கு அழைத்து சென்ற வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்த பொது ஒரு பெண்ணை திருமணம் முடித்து இருக்கிறார். அவருக்கு செல்வா (22) என்ற மகன் உள்ளார். ராஜ்கோட் மாவட்டம் புதிய ரயில் நிலைய காலணியில் வசிக்கும் செல்வா கடந்த 2021-ம் ஆண்டு பிரீபைர் கேம் மூலம் மதுரை பசுமலையை சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பழகி இருக்கிறார். காலப்போக்கில் 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது.