இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஏற்கனவே நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்கு நேற்று நடிகை கவுதமி ஆஜராகி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். மோசடி நடைபெற்றது உறுதி செய்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நிலம் வாங்கி தருவதாக நான் ஏமாற்றப்பட்டதும், தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
The post பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார் ராமநாதபுரம் எஸ்பி ஆபீசில் கவுதமி விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.