அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஸ்கூல் பேக் போன்ற பை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் கேரளாவைச் சேர்ந்த அப்துல்நசீர்(29) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல்நசீரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.