கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள். குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் கடும் ஏமாற்றமடைந்தனர்.கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், மேலும் குறைந்த செலவில் விடுமுறையை போக்க முடியும் என்பதால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.