பந்தலூர் அருகே சேலக்குன்னு பகுதியில்ஒரு மாத ஆண் குட்டி யானை இறப்பு-10 காட்டு யானைகளுடன் வந்தபோது பரிதாபம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் யானை குட்டி மர்மமான முறையில்  இறந்தது.பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் ஆண் யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும்  பிதர்காடு வனச்சரகம் உதவி வன பாதுகாவலர்  (பொறுப்பு)  கிருபாகரன் மற்றும் வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேற்று இரவு குட்டியுடன் 10 காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்துள்ளன. அதில் பிறந்து ஒரு மாதம் ஆன ஆண் யானைக்குட்டி இறந்துள்ளது. அதன் பின்னர் 10 யானைகளும் வனத்துக்குள் சென்று விட்டது.யானைக்குட்டி எதனால் இறந்தது? என்பது குறித்து கால்நடை மருத்துவரை கொண்டு உடல் கூறு பரிசோதனைக்கு பின் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: