பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் யானை குட்டி மர்மமான முறையில் இறந்தது.பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் ஆண் யானை குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பிதர்காடு வனச்சரகம் உதவி வன பாதுகாவலர் (பொறுப்பு) கிருபாகரன் மற்றும் வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.