கவுகாத்தி: அசாமில் சிவன் வேடமணிந்து அரசுக்கு எதிராக நாடகம் நடத்திய சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்த துலால் போரா என்ற சமூக ஆர்வலர், கடந்த சனிக்கிழமை தெரு நாடகம் நடத்தினார். இதில், அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து வசனம் பேசி நடித்தார். மேலும், கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? என அரசிடம் கேட்கும்படி மக்களையும் தூண்டி விட்டார். இது தொடர்பாக போலீசில் அந்த மாவட்ட பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.