சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி அய்யனார் கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைப்பட்டி கண்ணமங்கலம் கண்மாய் கரையோரத்தில் கரமால் கொண்ட அய்யனார் கோயில் உள்ளது. பிராண்டிபட்டி, சூரம்பட்டி கிராமமக்கள் சார்பில் இந்த கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, சிங்கம்புணரி வேளார் தெரு புரவி பொட்டல் திடலில் புரவி செய்யும் பணி தொடங்கியது. 1 அரண்மனை புரவி ஒன்று, 2 கிராம புரவி, 1 நேத்திக்கடன் புரவி என 4 புரவிகள் செய்யப்பட்டன.