சண்டிகர்: சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட விவகாரத்தில் சிக்கிய அரியானா மாநில ஐடி பிரிவு தலைவரை அம்மாநில பாஜக தலைமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. பாஜகவின் அரியானா மாநில பிரிவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு தலைவராக அருண் யாதவ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017 மற்றும் 2022ம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. எனவே அருண் யாதவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கூட சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டது. #Arrest ArunYadav என்று டுவிட்டரில் டிரெண்டானது.