கோத்தகிரி : கோத்தகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காலை முதலே மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது.கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாள்முழுவதும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், பகல் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. மதியம் 12 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் கடும் குளிர் நிலவி பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.