பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்ட கணவாய் வனப்பகுதியில், 5 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், ஒரு யானையை சுட்டுக் கொன்று விட்டு, தப்பியோடி உள்ளனர். நேற்று வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, துர்நாற்றம் வீசியுள்ளது.