கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் மணிக்கு 60 கீ.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குமரி, சின்னமுட்டம் சுற்றுப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்று வீசுவதால் கன்னியாகுமரியில் விவேகாந்தர் பாறை, திருவள்ளூர் சிலை பகுதிக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.