230 கிராம் தங்கத்துடன் நகை பட்டறை ஊழியர் தலைமறைவு..!!

சென்னை: சென்னையில் இருந்து கடப்பா சென்ற நகை பட்டறை ஊழியர் 230 கிராம் தங்க கட்டிகளுடன் தலைமறைவாகியுள்ளார். சவுகார்பேட்டையில் பிரதாப் என்பவரின் நகை பட்டறையில் 10 ஆண்டுகளாக ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 23-ம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள நகை கடைக்கு வழங்க 250 கிராம் தங்க சங்கிலியை ஆனந்த் எடுத்துச் சென்றார். தங்க கட்டிகளை வாங்கிய ஆனந்த் சென்னை திரும்பவில்லை என்று சவுகார்பேட்டை போலீசில் பிரதாப் புகார் அளித்துள்ளார்.

The post 230 கிராம் தங்கத்துடன் நகை பட்டறை ஊழியர் தலைமறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: