திருக்கழுக்குன்றம்: பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ அரசின் பழி வாங்கும் அரசியலை கண்டித்தும், அக்னி பாத் திட்டத்தை கைவிடக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.