புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பி.க்கள் 5 பேருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து புதிதாக 5 மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மாநிலங்களவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இவர்கள் பதவியேற்றனர்.