நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் உள்ளது கதலி நரசிங்க பெருமாள் கோயில். சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சிவன், அம்பாளுடன், பெருமாளும் ஒரே கருவறையில் வீற்றி அருள்பாலிப்பர். இக்ேகாயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில் விஸ்தரிப்பு செய்து 6 கால பூஜையுடன், ஆண்டுதோறும் ஐதீக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்து கோயில்கள் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இதனால் கோயில் கோபுரம் முதல் சுற்றுப்புற சுவர் வரை கடுமையாக சிதிலமடைந்துள்ளது.
