புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகர், கன்னடபாளையம், காந்தி நகர், திருவிக. நகர், அண்ணா நினைவு நகர், புனித அந்தோணியார் நகர், திருவீதி அம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.