சென்னை : அதிமுகவை சிலர் வீழ்த்த முயல்கின்றனர், அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், அதிமுக கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து ஐ.டி.பிரிவு துணை கொண்டு எதிர்காலத்தில் அதிமுகவை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். இதற்கு ஐ.டி.பிரிவின் பங்கு முக்கியம். துணை புரியுங்கள்.அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.நானே முன்னின்று காத்து நிற்பேன்.பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை, என்றார்.