புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு ராணுவ சேவை முடித்த பின்னர் அக்னி வீரர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்னி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.