கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 8வது சர்வதேச யோகா தின விழா நேற்று நடந்தது. இதில் 84 மாணவர்கள் உஸ்த்ராசனத்தில் 5 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 8வது சர்வதேச யோகா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்றுனரான சந்தியா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், அசிஸ்ட் உலக சாதனை ஆராய்ச்சி மைய நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.