விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில் ஓட்டுநர், பயணச்சீட்டு பரிசோதகர், மெக்கானிக்கல் பிரிவு பணியாளர்களிடம் குழு விசாரணை நடத்தும். கர்ப்பிணி தவறி விழுந்தபோது எஸ்-9 பெட்டியில் அபாய சங்கிலி செயல்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். விருத்தாசலம் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.

The post விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: