ஆதம்பாக்கத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: நாஞ்சில் பிரசாத் பங்கேற்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் நேற்று ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் மாவட்ட தலைவர் நாஞ்சி பிரசாத் பங்கேற்றார். இதில் காங்கிரசார் கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கி கொண்டாடினர். தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று ஆதம்பாக்கத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர்கள் ஏ.வி.தனசேகரன், வி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் பங்கேற்று, காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்தார்.

பின்னர் பிரமாண்ட கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு காலை உணவுடன் வழங்கி, ராகுல்காந்தியை வாழ்த்தி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கனி பாண்டியன், மாவட்ட துணை தலைவர்கள் டி.ஐயம்பெருமாள், கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் எம்.பி.நேருரோஜா, பி.எஸ்.ராஜ், எஸ்.வடிவேல், சங்கர், ஐ.செல்வம் ஜெகநாதன், சுரேஷ் ராம், டி.கிருஷ்ணன், கிருஷ்ண ரெட்டியார், எஸ்.எஸ்.ரமேஷ், வேல்முருகன், ஆர்.ஸ்டீபன், தாமஸ், ரமேஷ், சிலிண்டர் சீனிவாசன், மகாராஜன், ஆவின் ஆனந்த், டிக்சன், டி.கெஜபதி, சாலமோன், மகேஷ், கோபி, ரஜினிகண்ணன், வட்ட தலைவர்கள் ரவிக்குமார், பாஸ்கர், பாரதி, கே.சதீஷ், குருபாரதி, ஏழுமலை, மகிளா காங்கிரஸ் சரளா, அமுதா, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: