தமிழகம் ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!! Jun 15, 2021 ஆதார் திண்டுகல் தஸ்மக் கடைகள் திண்டுகல் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் குடையோடு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் உடுமலை, மடத்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குடையுடன் வரும் நபர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவிலான மதுபாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் புறநகர் பகுதியான ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கரையில் ஆதார் மற்றும் குடை கொண்டுவருவோருக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். … The post ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்