லண்டன் : உக்ரைனைச் சேர்ந்த பாலே நடன குழு ஒன்று பிரிட்டனில் நிகழ்ச்சியை நடத்தி உக்ரைன் புனரமைப்புக்காக நிதி திரட்டி வருகிறது. உக்ரைனைச் சேர்ந்த கீவ் சிட்டி பாலே கம்பெனி என்ற குழு உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தும் பயணத்தில் ஈடுபட்டு இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய போது, நாடு திரும்ப முடியாமல் அவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிக்கிக் கொண்டனர். 100 நாட்களையும் கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக அவர்கள் பல்வேறு நாடுகளில் பாலே நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.