மதுராந்தகம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா: அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 21ம் ஆண்டு விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி உள்ளது. இதன், 21ம் ஆண்டு விழா, அதன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிறுவனரும் தமிழக சட்டம், நீதித்துறை மற்றும் சிறை துறை அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி  முன்னிலை வகித்தார். முன்னதாக, இந்த நிறுவனத்தின் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை வரவேற்றார்.

 கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன்  ஆண்டறிக்கை வாசித்தார். டீன் சுப்பாராஜ் வாழ்த்துரை வழங்கினார்.இதில், கல்லூரியின் விழாமலரை அமைச்சர் ரகுபதி வெளியிட, சிறப்பு விருந்தனராக பங்கேற்ற திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பெற்றுக்கொண்டார். முடிவில், கல்லூரியில் 100 சதவீதம் வருகை தந்த மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories: