மதுராந்தகம்: மதுராந்தகம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 21ம் ஆண்டு விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி உள்ளது. இதன், 21ம் ஆண்டு விழா, அதன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிறுவனரும் தமிழக சட்டம், நீதித்துறை மற்றும் சிறை துறை அமைச்சருமான ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். முன்னதாக, இந்த நிறுவனத்தின் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை வரவேற்றார்.