சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்போன் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்ரேயன் கலந்துக் கொள்ளாமல் வெளியேறினார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளன. இதில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.