நெல்லை : நெல்லை அருகே தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). பாளை பெருமாள்புரம் உழவர் சந்தையில் ெசயல்படும் டாஸ்மாக் கடை ஊழியரான இவர், நேற்று வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அவர், ஜெயக்குமாரின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினார்.