திருச்செங்கோட்டில் 1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் விற்பனை டெண்டர் மூலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, இடைப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர்.

விரலி மஞ்சள் குவிண்டால் 16,330 முதல் 18,833 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 15,058 முதல் 17,199 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் 19,482 முதல் 26,569 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1800 மூட்டை மஞ்சள் 1.90 கோடிக்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருச்செங்கோட்டில் 1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: