சென்னை: கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜ அரசு துணை போகக்கூடாது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை அலட்சியப்படுத்தி கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று துடிக்கிறது. கடந்த மார்ச் மாதம் கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.