சென்னை: நயன்தாராவை முதல் முதலில் சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த விக்னேஷ் சிவன், தங்களது திரைப் பயணத்திற்கு அனைவரது ஆதரவும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், 9ம் தேதி மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நாளே, திருப்பதி திருமலை சென்ற தம்பதி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சென்னை தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் ஊடகங்களை சந்தித்த நயன்- விக்கி தம்பதி நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய நயன்தாரா, தம்பதியாக திரை உலகில் பயணிக்க போகும் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.