அரியானா: விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. ஹரியானாவில் முதல் முறையாக கேனைன் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுமார் 15 நாய்கள் உயிரிழந்தன. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு பலவீனமாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கால் அவதிப்படும் நாய்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும், அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.