புதுடெல்லி: நவீன போர்கப்பல், ஆயுத தளவாடங்கள் வாங்க ரூ76,390 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்துதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ76,390 கோடி மதிப்பிலான நவீன போர்க்கப்பல்கள், உபகரணங்கள், ஆயுத தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தொகையில் இருந்து 8 நவீன அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள் ரூ36,000 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளன. இந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு ரோந்து பணி, பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடுதல், தாக்குதல் மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.