தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோடை மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் முழு வீச்சில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து 9 மாதங்கள் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து கோடை மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.