பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற 55 நடிகர், நடிகைகளுக்கு கொரோனா: ஷாருக்கான், கத்ரினா கைப்புக்கு தொற்று

மும்பை: பிரபல தயாரிப்பாளரின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற 55 பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சினிமா மற்றும் டி.வி துறையை சேர்ந்த பலர் பங்கேற்றனர். மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் நடந்த விருந்தில் பாலிவுட் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், ஷாருக்கான், கேத்ரினா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா, கரீனா கபூர் போன்றோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், கரண் ஜோஹரின் பிரமாண்ட விருந்தில் விருந்தினர்களாக பங்கேற்ற 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை வெளியே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடிக்கும் நடிகை மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அக்‌ஷய் குமார் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ2022 நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை கத்ரினா கைப் , நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோ ருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: