மதுராந்தகம்: செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது புக்கத்துறை கிராமம். இங்கு உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் நேற்று அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனே, படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு படாளம் போலீசார் மற்றும் டிஎஸ்பி பரத் விரைந்து வந்தனர். இதில், உடலின் பெரும்பகுதி எரிந்த நிலையில் காணப்பட்டது. அது ஆண் சடலம் என்பது தெரியவந்தது. எரிந்த நிலையில் காணப்பட்ட நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர் குறுந்தாடியுடனும், பச்சை நிறத்தில் ஷார்ட்்ஸ் அணிந்திருந்தார். உடலை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.