திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் காரணமாக ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த அம்மா இல்லம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் முன்னாள் மாவட்டம் செயலாளர் பெருமாள் நகர் கே. ராஜன் காட்சி அலுவலகம், கணினி பயிற்சி கூடம், தயாள் பயிற்சி கூடம் ஆகிய வற்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக அம்மா இல்லம் மூடப்பட்டு செயல் படாமல் இருந்து உள்ளது. குத்தகை அடிப்படையில் அம்மா இல்லம் செயல் பட்டு வந்த இடத்தை மற்றோரு அதிமுக பிரமுகர் சஞ்சீவி ராஜன் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நாளிரவு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அம்மா இல்லத்தை சுக்குநூறாக உடைத்துள்ளனர்.